விழுப்புரம் ஹயக்கிரீவர் சன்னதியில் வித்யாரம்பம் நிகழ்ச்சி
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
09அக் 2019 03:10
விழுப்புரம்:விஜயதசமியை முன்னிட்டு, பெற்றோர்கள் தங்களின் குழந்தைகளுக்கு நெல்லில் எழுத கற்றுக் கொடுத்தனர்.
விழுப்புரம் ஆஞ்சநேயர் கோவில் வளாகத்தில் உள்ள, ஹயக்ரீவர் சன்னதியில் விஜயதசமி யன்று, வித்யாரம்பம் நடந்தது. அதனையொட்டி, ஹயக்ரீவருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை மற்றும் காலை 9:30 மணிக்கு தீபாராதனை வழிபாடு நடந்தது.இதையடுத்து, விழுப்புரம் நகரைச் சேர்ந்த பெற்றோர்கள் தங்களின் குழந்தைகளை அழைத்து வந்து, கோவிலில் அர்ச்சனை செய்தனர்.
பின், குழந்தைகளை பெற்றோர் மடியில் அமரவைத்து நெல் வைக்கப்பட்ட தட்டில், ’அ’ எழுத, கற்றுக்கொடுத்தனர். இந்நிகழ்வினை ராமமூர்த்தி ஆச்சாரியார் செய்திருந்தார்.