கள்ளக்குறிச்சி:நீலமங்கலம் காமாட்சி அம்மனுக்கு நவராத்திரி நிறைவு சிறப்பு பூஜை நடந்தது.கள்ளக்குறிச்சி அடுத்த நீலமங்கலம் காமாட்சி அம்மன் உடனுறை ஏகாம்பரேஸ்வரர் கோவிலில் சிறப்பு பூஜை நடந்தது.
நேற்று நவராத்திரி பூர்த்தி தினமான விஜயதசமியையொட்டி விநாயகர், வள்ளி, தெய்வானை, சுப்ரமணியர், சிவன், காமாட்சி, சண்டிகேஸ்வரர், பஞ்சமூர்த்தி தெய்வங்களுக்கு சிறப்பு அபி ஷேகம் செய்யப்பட்டது.மூலவர் காமாட்சி அம்மனுக்கு திவ்ய அலங்காரம் செய்து லலிதா சகஸ்ரநாம மந்திரங்களை வாசித்து குங்குமத்தால் அர்ச்சனை செய்தனர். சோடச தீபம் காண்பித்து, சோடசஉபசார மந்திரங்கள் வாசித்து பூஜை நடத்திய பின் மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது.ஏராளமான பக்தர்கள் வழிபட்டனர்.
நவராத்திரி பூஜைகளின் மகிமைகள் குறித்து கள்ளக்குறிச்சி அரசு கல்லுாரி மாணவர் சிவசுப்ரமணியம் பக்தர்களிடையே எடுத்துரைத்தார்.