அவலுார்பேட்டை:அவலுார்பேட்டை சாமுண்டீஸ்வரி அம்மன் கோவிலில் நவராத்திரி விழா நடந்தது. விழாவையொட்டி, அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், தீபாராதனை நடந்தது. இரவு உற்ச வர் அம்மன் லட்சுமி அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
* விழுப்புரம்: விழுப்புரம், நாராயணன் நகர், ஆதிபராசக்தி சக்தி பீடத்தில், நவராத்திரியையொட்டி தினமும், ஆதிபராசக்தி அம்மன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். அன்ன தானமும் வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சிக்கான, ஏற்பாடுகளை சக்திபீட பொறுப்பாளர்கள் செய்திருந்தனர்.