பழநி: பழநி முருகன் கோயிலில் நவராத்திரி விழாவுக்காக 10 நாட்கள் நிறுத்தப்பட்ட தங்கரதப்புறப்பாடு இன்று (அக்.,9) முதல் வழக்கம் போல நடக்கிறது.பழநி முருகன் கோயிலில் நாள்தோறும் இரவு 7:00 மணிக்கு தங்கரதத்தில் சின்னக்குமார சுவாமி புறப்பாடு நடக்கிறது.
இது கார்த்திகை, தைப்பூசம், நவராத்திரி ஆகிய முக்கியவிழா நாட்களில் நிறுத்தப்படுவது வழக்கம்.அதன்படி இவ்வாண்டு நவராத்திரி விழாவுக்காக கடந்த செப்.,29 முதல் அக்.,8 வரை 10 நாட்கள் நிறுத்தப்பட்டது. விழா முடிந்துவிட்டதால் இன்று (அக்.,9) முதல் வழக்கம்போல் இரவு 7:00மணிக்கு தங்கரதபுறப்பாடு நடைபெறுகிறது.