திண்டுக்கல் :விஜயதசமியை முன்னிட்டு திண்டுக்கல்லில் உள்ள கோயில்களில் லலிதா சகஸ்ரநாம பாராயணம், மகா தீபாராதனை, சிறப்பு பூஜைகள், அம்பு போடுதல், சூரன் வதம் நிகழ்ச்சிகள் நடந்தது.
திண்டுக்கல் மலையடிவாரம் பத்ரகாளியம்மன் கோயிலில் நேற்று 8ம் தேதி இரவு 7:00 மணி யளவில் அம்மன் நான்கு ரத வீதி வழியாக அலங்கார வீதி உலா வந்தார். 8:30 மணியளவில் சிம்ம வாகனத்தில் மகிஷாசூரவர்த்தினி அலங்காரத்தில் சூரனை வதம் செய்யும் சூரசம்ஹா ரம் நடந்தது. கோட்டை மாரியம்மன் கோயிலில் குதிரை வாகனத்தில் எழுந்தருளினார். மாலை 5:00 மணிக்கு அம்புபோடுதல் நிகழ்ச்சி நடந்தது.
பழநி: நவராத்திரிவிழா பழநி முருகன்கோயிலில் செப்.,29ல் காப்புக்கட்டுதலுடன் துவங்கியது. நேற்று விஜயதசமியை முன்னிட்டு மலைக் கோயிலில் சாயரட்சைபூஜை மதியம் 1:30 மணி க்கே நடந்தது. அதன்பின் 3:00மணிக்கு சன்னதிநடை சாத்தப்பட்டது.
மலைக்கோயிலிருந்து பாதவிநாயகர்கோயிலுக்கு வந்த பராசக்திவேலை ஏராளமான பக்தர் கள் வரவேற்றனர். பெரியநாயகியம்மன் கோயிலுக்கு சென்று, அங்கிருந்து தங்க குதிரை வாகனத்தில் முத்துக்குமாரசுவாமி பராசக்திவேல், கேடயம், வில், அம்புடனும் புறப்பட்டனர். அவரை பின்தொடர்ந்து கருடவாகனத்தில் லட்சுமி நாராயணப் பெருமாளும் கோதைமங்கலத் திற்கு சென்றனர்.