கடலாடி: கடலாடி அருகே மாரியூர் பூவேந்தியநாதர் சமேத பவளநிறவல்லியம் மன் கோயி லில் நவராத்திரி விழா நடந்தது.
செப்.,29ல் காப்பு கட்டுதலுடன் விழா துவங்கியது. மூலவர்களுக்கு அபிஷேக ஆராதனைகள் செய்யப்பட்டு, ஒவ்வொரு நாளும் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். நிறைவு நாளான நேற்று 8ம் தேதி மாலை 4:00 மணிக்கு அம்மன், மகிஷாசூரனை வதம் செய்யும் நிகழ்ச்சி நடந்தது.
பின் பக்தர்கள் கோயில் வளாகத்தில் உள்ள வன்னி மரத்தை 21 முறை சுற்றி வலம் வந்தனர். பெண்கள் எலுமிச்சம் பழத்தில் விளக்கேற்றி வழிபாடு செய்தனர். ஏற்பாடுகளை மகாசபை பிரதோஷ அன்னதான கமிட்டியினர் செய்திருந்தனர்.
அங்கு கோதையீஸ்வரர் கோயிலில் வாழைமரம், வன்னிமரத்தில் அம்பு ஏய்து மகிஷாசூரன் வதம் நடந்தது. இணை ஆணையர் ஜெயச்சந்திரபானுரெட்டி, துணை ஆணையர் செந்தில் குமார் பலர் பங்கேற்றனர். அதன்பின் முத்துகுமாரசுவாமி பெரியநாயகியம்மன் கோயிலுக் கும், பராசக்திவேல் மலைக்கோயிலுக்கு சென்றபின் நள்ளிரவில் அர்த்தஜாம பூஜை நடந்தது.