சிவகங்கை: சிவகங்கை கோகலே ஹால் தெரு சிருங்கேரி சாரதா பீடம் சங்கர மடத்தில் நவராத்திரி உற்ஸவம்,லட்சார்ச்சனை நடந்தது. செப்.29 முதல் அக். 8 வரை மஹோத்ஸவமும், சிறப்பு வழிபாடும் நடத்தப்பட்டது. அனைத்து நட்சத்திரங்களின் பெயரிலும் அதற்குரிய தேதிகளில் வழிபாடு நடத்தப்பட்டது.
விஜயதசமியான நேற்று 8ம் தேதி காலை 8:00 மணி முதல் பகல் 12:00 மணி வரை சிறப்பு லட்சார்ச்சனை நடந்தது. கணபதி ஹோமத்துடன் துவங்கி லலிதா ஹோமம், துர்கா ஹோமம் மற்றும் தம்பதி பூஜை நடத்தப்பட்டது. தொடர்ந்து சுவாசினி பூஜையும், கன்யா பூஜையும் நடந்தது. இதில் ஏராளமானவர்கள் பங்கேற்றனர். அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.