மதுரை: மதுரை சேதுபதி பள்ளியில் ஷீரடி சாய்பாபாவின் 101ம் ஆண்டு மகா சமாதி திரு விழா வை முன்னிட்டு துவங்கிய ’மதுரையில் ஷீரடி’ ஆன்மிக நிகழ்ச்சியின் நிறைவு விழா நேற்று 8ம் தேதி நடந்தது.
ஆதீன மடத்தில் எழுந்தருளிய பாபா, மாசி வீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித் தார். இதில் மதுரை ஆதீனம், பள்ளி தாளாளர் பார்த்தசாரதி, வழக்கறிஞர் ராமகிருஷ்ணன், நிகழ்ச்சி தலைவர் உஷா, துணைத் தலைவர் சுதன் பாலா, பொருளாளர் வெங்கட், உறுப்பினர்கள் மணிகண்டன், தியாகு, திலகவதி ஆகியோர் பங்கேற்றனர்.