பதிவு செய்த நாள்
09
ஏப்
2012
11:04
திருவள்ளூர்:எல்லையம்மன் கோவில் ஜாத்திரை திருவிழா, நேற்று கோலாகலமாக நடந்தது.திருவள்ளூர் அடுத்த, கீழ்நல்லாத்தூர் எல்லையம்மன் கோவில் ஜாத்திரை திருவிழா, நேற்று முன்தினம் காலை துவங்கியது. விழாவையொட்டி அன்று காலை 9 மணிக்கு சுவாமி புறப்பாடு நடந்தது. தொடர்ந்து, 11 மணிக்கு அம்மன் திருவீதியுலாவும், அம்மனுக்கு கூழ்வார்த்தல் நிகழ்ச்சியும் நடந்தது. அன்று மாலை 6 மணிக்கு ஆன்மிக சொற்பொழிவும் நடந்தது.இரண்டாம் நாளான நேற்று, காலை 8 மணிக்கு பக்தர்கள் தங்களது வேண்டுதலை அடிதாண்டம் மற்றும் வேப்பஞ்சேலை செலுத்தி நிறைவேற்றினர். காலை 11 மணிக்கு தங்களது உடலில் பக்தர்கள் அலகு குத்தி, பக்தி பரவசத்துடன் வேண்டுதல் செலுத்தினர். பிற்பகல் 3 மணிக்கு அம்மனுக்கு மஞ்சள் நீராட்டு நிகழ்ச்சி நடந்தது.தொடர்ந்து இரவு 9 மணிக்கு வண்ண மலர்களால் அம்மன் அலங்கரிக்கப்பட்டு தாரை தப்பட்டை, மேள வாத்தியங்கள், கரகாட்டம், காவடி ஆட்டம், பொய்க்கால் குதிரையுடன் திருவீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இரவு 10 மணிக்கு தெருக்கூத்து நடந்தது.