பதிவு செய்த நாள்
09
அக்
2019
04:10
வடவள்ளி:மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலின், உபகோவிலான, பி.என்.புதூரில் உள்ள, கரிவரதராஜ பெருமாள் கோவிலில், பிரம்மோற்சவ விழா இன்று 9ம் தேதி காலை, 9:30 மணிக்கு, கருட கொடியேற்றத்துடன் துவங்குகிறது.
இன்று 9ம் தேதி முதல் 20ம் தேதி வரை, நாள்தோறும் காம்யார்த்த ஹோமங்களும், மாலையில் சுவாமி திருவீதி உலாவும் நடக்க உள்ளது. 14ம் தேதி மாலை, 6:00 மணிக்கு, சுவாமி கருட வாகனத்தில் திருவீதி உலா நடக்கிறது.18ம் தேதி காலை, 9:00 மணிக்கு, பூமிநீளா தேவி சமேத கரிவரதராஜ பெருமாள் திருக்கல்யாணமும், மாலை, 6:00 மணிக்கு, கரிவரதராஜ பெருமாள் திருத்தேரில் எழுந்தருளி திருவீதி உலாவும் நடக்கிறது.