பதிவு செய்த நாள்
09
அக்
2019
04:10
திருப்பூர்:திருமுருகன்பூண்டி ஜெ.எஸ்., கார்டனில் அமைக்கப்பட்ட, ஸ்ரீகுருராகவேந்திரர் கோவில், ம்ருத்திகா பிருந்தாவன நுாதன பிரதிஷ்டாபன கும்பாபிஷேக விழா கோலாகலமாக நடந்தது.
திருமுருகன்பூண்டி ஜெ.எஸ்., கார்டன், ஸ்ரீராகவேந்திரா நகரில் உள்ள, ஸ்ரீலட்சுமி நரசிம்மர், ஸ்ரீ கணபதி, ஸ்ரீமஞ்சாலம்மன், ஸ்ரீ ஆஞ்சநேயர், ஸ்ரீகுருராகவேந்திர சுவாமிகள் கோவில் கும்பாபிஷேக விழா நேற்று 8ம் தேதி நடந்தது.
கோவில் புதிதாக கட்டப்பட்டு, ம்ருத்திகா பிருந்தாவன நுாதன பிரதிஷ்டாபன கும்பாபிஷேக விழா நிகழ்ச்சியாக, நேற்று காலை, 6:00 மணிக்கு, யாகசாலை பூஜைகள், மகா பூர்ணாஹூதி பூஜைகள் நடந்தன. காலை, 7:00 மணிக்கு பிரதிஷ்டாபணமும், காலை, 7:00 மணி முதல், 9:00க்குள், மகா கும்பாபி ஷேகமும் நடந்தது.
அதன்பின், சிறப்பு அபிஷேக பூஜைகளும், மகா அலங்காரபூஜையும், சமஸ்தான பூஜையும் நடந்தது. விழாவையொட்டி பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. கும்பாபிஷேக விழா ஸ்ரீகுருராகவேந்திரா சேவா சங்க நிர்வாகிகள் மற்றும் பக்தர்கள் செய்திருந்தனர்.