பதிவு செய்த நாள்
09
அக்
2019
04:10
பல்லடம்:பல்லடம் அருகே அருள்புரத்தில், வடமாநில குடும்பத்தினர் சார்பில், மூன்றாவது ஆண்டாக, நவராத்திரி விழா கொண்டாடப்பட்டது.திருப்பூர் மாவட்டத்தில், பல்வேறு தொழில் நிறுவனங்களை சார்ந்து, ஏராளமான வட மாநில குடும்பத்தினர் வசிக்கின்றனர். இவர்கள், நவராத்திரி விழாவை உற்சாகமாக கொண்டாடுகின்றனர்.
பல்லடம் அருகே அருள்புரத்தில், வடமாநில குடும்பத்தினர் சார்பில், துர்கா சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டது. கடந்த, 10 நாட்களாக, சயலபுத்ரி தேவி பூஜை, பிரம்மசாரணி தேவி பூஜை, சரந்திரக்டாதேவி பூஜை, குஷ்மண்டா தேவி பூஜை உட்பட, 9 நாட்களும் ஒன்பது விதமான பூஜை நடத்தினர்.
நவராத்திரி கடைசி நாளான நேற்று 8ம் தேதி, மஹா நவமி சித்திதார்த்தி பூஜை மற்றும் சிறப்பு ஹோமம் நடந்தது. ஏராளமான வட மாநிலத்தவர், குடும்பத்துடன் பூஜையில் பங்கேற்றனர்.
’துர்கா சிலை, இன்று 9ல், பவானி கூடுதுறையில் விசர்ஜனம் செய்யப்படும்’ என, விழா குழுவினர் தெரிவித்தனர்.