அவலூர்பேட்டை : அவலூர்பேட்டை சித்தகிரி முருகன் கோவிலில் பங்குனி உத்திர திருவிழா நடந்தது. விழாவையொட்டி நேற்று முன்தினம் நள்ளிரவு 12.30 மணிக்கு மலை அடிவாரத்தில் உள்ள குளத்தில் மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட தெப்பலில் வள்ளி தெய்வானை சமேத முருகப்பெருமான் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். சுவாமிக்கு மகா தீபாராதனை நடந்தது. இதில் கீழ்பென்னாத்தூர் எம்.எல்.ஏ., அரங்கநாதன், அ.தி.மு.க., ஒன்றிய செயலாளர் புண்ணியமூர்த்தி, விழா குழு தலைவர் ராமலிங்கம், ஊராட்சி தலைவர் கலா ராஜவேலாயுதம், ஒன்றிய கவுன்சிலர் சிவகாமி ரங்கநாதன் , அறநிலையதுறை அதிகாரிகள் உட்பட ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.