பதிவு செய்த நாள்
09
ஏப்
2012
11:04
திண்டிவனம் : திண்டிவனம் திந்திரிணீஸ்வரர் கோவில் கும்பாபிஷேக விழா நடந்தது. திண்டிவனத்தில் உள்ள ஆயிரம் ஆண்டுகள் பழமைவாய்ந்த மரகதாம்பிகை உடனுறை திந்திரிணீஸ்வரர் கோவில் கும்பாபிஷேக விழா நேற்று நடந்தது. நேற்று காலை 8.10 மணிக்கு விநாயகர், முருகன், திருமூலநாதர், நவகிரக சன்னதி, திருநள்ளாறு சனீஸ்வரர் சன்னதி உள்ளிட்ட பரிவார மூர்த்திகளுக்கு கும்பாபிஷேகம் நடந்தது. தொடர்ந்து 9 மணிக்கு நாடி சந்தானம் தத்வார்ச்சனை ஸ்பரி சாஹீதி நடந்தது. காலை 11.25 மணிக்கு ராஜகோபுரம், மூலவர்கள் திந்திரிணீஸ்வரர், மரகதாம்பிகை அம்பாள் விமான கலசங்களின் மீது புனித கலச நீர் ஊற்றப்பட்டு, கும்பாபிஷேகம் நடந்தது. பூஜைகளை அர்ச்சகர் ராதா குருக்கள் மற்றும் போடி கணேச சிவம் குருக் கள் தலைமையிலான சிவாச்சாரியர்கள் செய்தனர். விழாவில் அமைச்சர் சண்முகம், அவரது சகோதரர் ராதாகிருஷ்ணன், ராம் டெக்ஸ் தியாகராஜன், வெங்கடேசன், பி.ஆர். எஸ்., பார்த்தசாரதி, ரங்கமன்னார், சதீஷ், நகை வியாபாரிகள் சங்க ராம்லால் ரமேஷ், எம்.எல். ஏ.,க்கள் டாக்டர் அரிதாஸ், நாகராஜன், ஜானகிராமன், நகர் மன்ற சேர்மன் வெங்கடேசன், சேர்மன்கள் இந்திரா பன்னீர், அண்ணாதுரை, மாவட்ட ஜெ, பேரவை முன்னாள் செயலாளர் முரளி ரகுராமன், முன்னாள் கவுன்சிலர் சேகர், அறநிலையத்துறை இணை ஆணையர் அழகர்சாமி, உதவி ஆணையர் ஜோதி, ஆய்வர் சிவாகரன், செயல் அலுவலர் முத்துலட்சுமி உட்பட பலர் கலந்து கொண்டனர்.ஜெயின் சங்கம் உள்ளிட்ட அமைப்புகள் சார்பில் அன்னதானமும், நீர் மோர் தானமும் பக்தர் களுக்கு வழங்கினர்.