பெரியகுளம்: பெரியகுளம் ஷீரடி சாய்பாபா கோயிலில் 101 வது மகாசமாதி தினம் காலை ஆரத்தியுடன் துவங்கியது. விக்னஷே்வரபூஜை, சங்கல்பம், புண்யாஹம், கும்ப ஸ்தாபனம், கணபதிேஹாமம், சுதர்சன ேஹாமம் மற்றும் சாயி அஷ்டோத்திர ஹோமம் பூஜைகள் நடந்தது.
பாபாவிற்கு மஹா அபிஷேகமும், பகல் ஆரத்தி, அன்னதானம் நடந்தது. மாலை ஆரத்தி மற்றும் சாவடிஊர்வலம், இரவு ஆரத்தி நடந்தது. மாவட்டத்தின் பல்வேறு ஊர்களில் இருந்து ஆயிரக்கணக்கான சாயி பக்தர்கள் பங்கேற்றனர். ஷீரடி சாய்பாபா கோயில் பின்புறம் கைலாசநாதர் கோயில் மலையில், சிவபெருமான் சயன காட்சியை பக்தர்களுக்கு, அர்ச்சகர்கள் குழுவினர் காண்பித்தனர். ஏற்பாடுகளை எம்.எம்.பி.டி., டிரஸ்ட் நிர்வாகிகள் டாக்டர் டி.முத்துவிஜயன், வர்த்தக பிரமுகர் பி.முத்துமகஷே்வரன் செய்திருந்தனர்.