பதிவு செய்த நாள்
10
அக்
2019
02:10
சூலுார்:சூலுார் பெருமாள் கோவில் தேரோட்டத்தில், ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். சூலுார் ரயில்வே பீடர் ரோட்டில் உள்ள ஸ்ரீ தேவி பூதேவி சமேத வேங்கடநாத பெருமாள் கோவில் பிரசித்தி பெற்றது.
இங்கு தேர்திருவிழாவையொட்டி, கடந்த, 4ம் தேதி வாஸ்து பூஜை, கிராம சாந்தி நடந்தது. 5ம் தேதி யாக சாலை பூஜை முடிந்து, கொடியேற்றம் நடந்தது.நேற்று 9ம் தேதி, காலை, 10:00 மணிக்கு, பெருமாளுக்கு திருக்கல்யாண உற்சவம் நடந்தது. தொடர்ந்து, மாலை, 3:00 மணிக்கு, உற்சவ மூர்த்திகள் திருத்தேருக்கு எழுந்தருளினர். பக்தர்கள் கோவிந்தா, கோவிந்தா என, சரண கோஷத்துடன் தேரை வடம் பிடித்து இழுத்தனர்.
நான்கு மாட வீதிகளின் வழியாக, திருத்தேரில் திருவீதி உலா வந்த சுவாமியை, ஏராளமான பக்தர்கள் வழிபட்டனர். இன்று பரிவேட்டை, தெப்போற்சவம் நடக்கிறது. நாளை 11ம் தேதி வசந்த உற்சவம், மகா அபிஷேகம் நடக்கிறது.