பதிவு செய்த நாள்
09
ஏப்
2012
11:04
அரியலூர்: அரியலூர் மாவட்டம் கல்லங்குறிச்சியில் பிரசித்தி பெற்ற கலியுக வரதராஜ பெருமாள் கோவில் உள்ளது. கலியபெருமாள் கோவில் என பொதுமக்களால் அழைக்கப்படும் இக்கோயில், தஞ்சை, திருச்சி, புதுக்கோட்டை, நாமக்கல், சேலம், விழுப்புரம், கடலூர், நாகை, திருவாரூர், அரியலூர் மற்றும் பெரம்பலூர் உள்ளிட்ட மாவட்டங்களைச் சேர்ந்த லட்சக்கணக்கான மக்களின் பிரார்த்தனை தலமாக விளங்குகிறது. இக்கோவிலின் பெருந்திருவிழா கடந்த மாதம் 31ம் தேதி ஸ்ரீராமநவமியன்று கொடி ஏற்றத்துடன் துவங்கியது. கடந்த நான்காம் தேதி வெள்ளி கருட சேவை, படத்தேர், ஆறாம் தேதி திருக்கல்யாண உற்சவம், கண்ணாடி பல்லக்கு உள்பட, நாள்தோறும் ஸ்வாமி அம்பாள் திருவீதி உலா மற்றும் பல்வேறு இசை நிகழ்ச்சிகளும் நடந்தது. பெருந்திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் நேற்று காலை 5.30 மணிக்கு துவங்கி நடந்தது. அலங்கரிக்கப்பட்ட பெரிய தேரில், ஸ்ரீதேவி-பூதேவி சமேத வரதராஜ பெருமாளும், சிறிய தேரில் ஆஞ்சநேய ஸ்வாமியும் எழுந்தருளினர். கல்லங்குறிச்சியின் நான்கு ராஜ வீதிகளிலும் வலம் வந்த தேரை பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர். தேரோட்டத்தின் போது கோவிந்தா, கோவிந்தா என, தேரோட்டத்தை காணவந்த பல்லாயிரக்கணக்கான பக்தர்களும் கோஷமிட்டனர். கல்லங்குறிச்சி கலியபெருமாள் கோவில் தேரோட்டத்தையொட்டி சேலம், ஆத்தூர், விழுப்புரம், பெரம்பலூர், துறையூர், திருச்சி, தஞ்சை, ஜெயங்கொண்டம், கும்பகோணம் உள்ளிட்ட பல்வேறு ஊர்களிலிருந்தும், அர சு போக்குவரத்து கழகம் சார்பில் நூற்றுக்கும் மேற்பட்ட சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டது. தே÷ ராட்டத்துக்கான ஏற்பாடுகளை கோவிலின் ஆதீன பரம்பரை தர்மகர்த்தா கோவிந்தசாமி செய்திருந்தார். தேரோட்டத்தை முன்னிட்டு கல்லங்குறிச்சியில் பல இடங்களிலும் பொதுமக்கள், தொண்டு நிறுவனங்கள் மற்றும் பல்வேறு சங்கங்கள் சார்பில் அன்னதானம் வழங்கப்பட்டது.