பதிவு செய்த நாள்
13
அக்
2019
04:10
திருக்கோவிலூர்: திருக்கோவிலூர், கீழையூர், வீரட்டானேஸ்வரர் கோவிலில், புரட்டாசி சதுர்த்தசி திதியை முன்னிட்டு நடராஜருக்கு மகா அபிஷேகம் நடந்தது.
திருக்கோவிலூர், கீழையூர், வீரட்டானேஸ்வரர் கோவிலில், புரட்டாசி சதுர்த்தசி திதியை முன்னிட்டு நேற்று மாலை 6:00 மணிக்கு அனுக்ஞை, விக்னேஸ்வர பூஜை, புண்ணியாகவாசனம், கலச ஸ்தாபனம், பஞ்சாசன பூஜை, சிவகாமசுந்தரி சமேத சிதம்பரேஸ்வரர் மூலமந்திரம், சிவபுராணம், தேவார திருவாசக பாராயணம், தொடர்ந்து நடராஜ பெருமானுக்கு ஸ்ரீ ருத்ர மகா அபிஷேகம் நடந்தது. சுவாமிக்கு சிறப்பு அலங்காரத்தில் மகாதீபாராதனை நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். ஆண்டிற்கு 6 தினங்கள் மட்டுமே நடராஜருக்கு அபிஷேகம் நடைபெறும், அதில் முக்கிய தினமான புரட்டாசி சதுர்த்தசி தினத்தில் நடைபெறும் அபிஷேகத்தில் முப்பத்து முக்கோடி தேவர்களும் அரூபமாய் எழுந்தருளி இருப்பார் என்பது ஐதீகம். எனவே அந்த நேரத்தில் நடராஜரின் அபிஷேகத்தை தரிசனம் செய்து நாம் வேண்டிக் கொள்ளும் வேண்டுதல்கள் யாவும் நிறைவேறும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.