பதிவு செய்த நாள்
13
அக்
2019
04:10
மதுரை:குருப்பெயர்ச்சியை முன்னிட்டு மயிலாடுதுறை வள்ளலார் கோயிலில்அக்.,29ல் குருப்பெயர்ச்சி விழாவும், மேதா தட்சிணாமூர்த்திக்கு லட்சார்ச்சனையும் நடக்கிறது.
அக்., 29 அதிகாலை 3:40 மணிக்கு குருபகவான் விருச்சிக ராசியில் இருந்து தனுசு ராசிக்கு பெயர்ச்சியாகிறார்.
அதை முன்னிட்டு லட்சார்ச்சனை அக்., 13 முதல் நவ., 8 வரை நடக்கிறது.கங்கைக்கு பாவ விமோசனம், ரிஷப தேவருக்கு ஆணவம் நீக்கி உபதேசம்செய்தவர் தட்சிணாமூர்த்தி. நவக்கிரகங்களில் குருவால் வழிபடப்பட்டவர் என்பதால் இங்கு அனுக்கிரக மூர்த்தியாக போற்றப்படுகிறார்.தருமையாதீனம் சண்முக தேசிக பரமாச்சாரிய சுவாமிகள், இளைய சன்னிதானம் மாசிலாமணி தேசிக ஞான சம்பந்த சுவாமிகள் முன்னிலையில் பஞ்சமுக தீபாராதனை நடக்கிறது. பக்தர்கள் ரூ.250 செலுத்தி லட்சார்ச்சனையில் பங்கேற்கலாம். அக்.,29 முதல் 31 வரை அனைத்து ராசியினருக்கு சர்வதோஷ பரிகார குரு மகாயாகம் நடக்கிறது. தொடர்புக்கு: 94434 89491.