பதிவு செய்த நாள்
13
அக்
2019
04:10
பொள்ளாச்சி: பொள்ளாச்சி மற்றும் சுற்றுப்பகுதி கோவில்களில், புரட்டாசி சனிக்கிழமையை முன்னிட்டு, சிறப்பு பூஜைகள் நடந்தன.பொள்ளாச்சி கடைவீதி கரிவரதராஜப்பெருமாள் கோவிலில், புரட்டாசி சனிக்கிழமையையொட்டி நேற்று அதிகாலை சிறப்பு அபிஷேகம், அலங்காரம் உள்ளிட்ட பூஜைகள் நடந்தது. பக்தர்கள், அர்ச்சனை செய்தும், தீபங்கள் ஏற்றியும் பெருமாளை வழிபட்டனர். மாலையில், பெருமாள் திருவீதி உலா செல்லும் நிகழ்ச்சி நடந்தது.பொள்ளாச்சி பாலக்காடு ரோடு லட்சுமி நரசிம்மர் கோவிலில், அபிஷேகம், அலங்காரம் உள்ளிட்ட பூஜைகள் நடைபெற்றன.பொள்ளாச்சி டி.கோட்டாம்பட்டி ஸ்ரீதேவி, பூதேவி சமேத ஸ்ரீ வரதராஜப்பெருமாள் கோவிலில், மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை உள்ளிட்ட சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. தொடர்ந்து, சீனிவாச பெருமாள் அலங்காரத்தில் பெருமாள் அருள்பாலித்தார். திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.பொள்ளாச்சி டி.கோட்டாம்பட்டி கோதண்டராமர் கோவிலில், சீதாராமருக்கு திருமஞ்சனம் உள்ளிட்ட சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.
அன்னதானம் வழங்கப்பட்டது. தொடர்ந்து, கோதண்டராமர், மகா விஷ்ணு அவதாரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.ஆனைமலை ஸ்ரீதேவி, பூதேவி சமேத ரங்கநாத பெருமாள் கோவிலில், புரட்டாசி சனிக்கிழமையையொட்டி திருப்பள்ளியெழுச்சி உள்ளிட்ட சிறப்பு பூஜைகள் நடந்தது. ஒன்பது வகையான அபிஷேகம், ஒன்பது வகையான மலர்களால் அலங்கார பூஜைகள் நடைபெற்றன. ஒன்பது வகையான ஹோம பூஜையும் நடந்தது. தொடர்ந்து, பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.பொள்ளாச்சி சிவராம பக்த ஆஞ்சநேயர் கோவிலில், புரட்டாசி சனிக்கிழமையையொட்டி சிறப்பு அபிஷேகம், அலங்காரம் உள்ளிட்ட சிறப்பு பூஜைகள் நடந்தது.