பதிவு செய்த நாள்
14
அக்
2019
12:10
நாமக்கல்: புரட்டாசி மாத பவர்ணமியை முன்னிட்டு, நாமக்கல் ஆஞ்சநேயர் கோவிலில் ஏராளமான பக்தர்கள் சிறப்பு வழிபாடு செய்தனர்.
நாமக்கல்லில், ஒரே கல்லினால், 18 அடி உயரத்தில் உருவான ஆஞ்சநேயர் நின்ற நிலையில் பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார். அங்கு ஆஞ்சநேயர் ஜெயந்தி, தமிழ் மாதம் முதல் ஞாயிறு, அமாவாசை, பவுர்ணமி, வருட பிறப்புகள் உள்ளிட்ட முக்கிய நாட்களில் சிறப்பு வழிபாடு செய்யப்படும். அதேபோல், நேற்று புரட்டாசி பவுர்ணமியை முன்னிட்டு சிறப்பு அபி ஷேகம், அலங்காரம் செய்யப்பட்டது. காலை, 9:00 மணிக்கு ஆஞ்சநேயருக்கு வடை மாலை அலங்காரம் நடந்தது. தொடர்ந்து நல்லெண்ணெய், சீயக்காய், பால், தயிர், வெண்ணெய், தேன், பஞ்சாமிர்தம், திருமஞ்சனம், மஞ்சள், சந்தனம் போன்ற பொருட்களால் அபிஷேகம் நடந்தது. மதியம், 1:00 மணிக்கு சுவாமிக்கு தங்க கவசத்தில் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது. ஆயிரக்கணக்கான பக்தர்கள், நீண்ட வரிசையில் நின்று சுவாமி தரிசனம் செய்தனர்.