செஞ்சி: செஞ்சி கோட்டை வெங்கட்ரமணர் கோவிலில் திருக்கல்யாண உற்சவம் நடந்தது. செஞ்சி கோட்டை வெங்கட்ரமணர் கோவிலில் புரட்டாசி மாத உற்சவத்தை முன்னிட்டு திருக்கல்யாண உற்சவம் நேற்று நடந்தது.
இதை முன்னிட்டு காலை 9 மணிக்கு ஸ்ரீதேவி பூதேவி வெங்கட்ரமணருக்கு சிறப்பு திருமஞ்சனம் செய்தனர். 12 மணிக்.கு திருக்கல்யாண உற்சம் துவங்கி 1.45 மணிக்கு முடிந்தது. 2 மணிக்கு நாட்டிய நிகழ்ச்சி நடந்தது. பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கினர். இதில் ஹீரங்கபூபதி கல்வி நிறுவன தாளாளர் ரங்க பூபதி, வழக்கறிஞர் வைகை தமிழ், ஆடிட்டர் தனசேகர் மற்றும் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.