ராமேஸ்வரம்: மழை பெய்ய வேண்டி ராமேஸ்வரம் அக்னி தீர்த்த கரையில் மகா சமுத்திர ஆரத்தி, பூஜை நடந்தது.
நம் நாட்டில் மழை பெய்ய வேண்டியும், ராமேஸ்வரம் திருக்கோயில் அக்னி தீர்த்தம் மாசுபடாமல், அதன் புனிதம் காக்கவும், இயற்கை சீற்றத்தில் இருந்து மக்களை பாதுகாக்க வேண்டி ராமேஸ்வரம் அக்னி தீர்த்தம் மகா சமுத்திர ஆரத்தி சமிதி சார்பில் நேற்று ராமேஸ்வரம் காஞ்சி மடத்தில் 12 ஜோதிர்லிங்கத்திற்கும் 108 வகை மூலிகை அபிஷேகம் நடத்தினர். பின் அக்னி தீர்த்த கடற்கரையில் வேத விற்பன்னர்கள் மந்திரம் முழங்க 27 நட்சத்திர தீபங்களுக்கு ஜோதி ஏற்றி, சமுத்திர பகவானுக்கு அபிஷேகம் செய்தனர். இதனைதொடர்ந்து மகா சமுத்திர ஆரத்தி நடந்தது. இதில் கோயில் தக்கார் குமரன்சேதுபதி, மகா சமுத்திர ஆர்த்தி சமிதி நிர்வாகிகள் நாகராஜ், மோகன், பூபதி, கணேசன், ஏராளமான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர்.