பதிவு செய்த நாள்
14
அக்
2019
01:10
திருக்கழுக்குன்றம்: திருக்கழுக்குன்றம் கிரிவலப் பாதையில், திருமலை சொக்கம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில், மாத பிறப்பு, பவுர்ணமி, விசாகம், சஷ்டி மற்றும் பிரதோஷ நாட்களில், கிரிவலம் வருவோர், அம்மனை வழிபட்டு செல்வர். புரட்டாசி மாத பவுர்ணமியை ஒட்டி, நேற்று, மூலவர் சொக்கம்மனுக்கு பால், தயிர், பன்னீர், சந்தனம், இளநீரால் மஹா அபிஷேகம், தீப துாப ஆராதனை நடந்தது. தொடர்ந்து, சிறப்பு புஷ்ப அலங்காரத்துடன், கம்பா நதி அலங்காரத்தில் சொக்கம்மன் எழுந்தருளி, பக்தர்களுக்கு அருள்பாலித்தார். விழா ஏற்பாடுகளை, கோவில் அர்ச்சகர் ராஜேந்திரன் செய்தார்.