பதிவு செய்த நாள்
14
அக்
2019
02:10
மதுரை: மதுரை பரவையில் மண்பாண்ட தொழிலாளி வேல்முருகன் ஒரு கை இழந்த நிலையிலும் தீபாவளி, கார்த்திகைக்காக அகல் விளக்குகளை நம்பிக்கையுடன் தயாரித்து வருகிறார்.
அவர் கூறியதாவது: இங்கு 20 குடும்பத்தினர் மண்பாண்ட தொழில் செய்கின்றனர். 13 வயதிலேயே இத்தொழிலுக்கு வந்து விட்டேன். எட்டு ஆண்டுகளுக்கு முன் தொழிற்சாலையில் ஒன்றில் பணி செய்த போது வலது கை இயந்திரத்தில் சிக்கி மணிக்கட்டுடன் துண்டானது. விடாமுயற்சிக்கு பின் ஒரு கையால் மண்பாண்டங்கள் செய்ய பழகினேன். தன்னம்பிக்கையை இழக்காமல் களிமண்ணில் டீ கப், உண்டியல், ஜாடி, பானை மூடிகள், தட்டுக்கள், சிறு பொம்மைகள் என கலை நயமிக்க பொருட்களையும் செய்கிறேன். தீபாவளி, கார்த்திகை சீசன் நெருங்குவதால் அகல் விளக்குகள் செய்கிறேன். மதுரை உட்பட பல மாவட்டங்களில் இவ்விளக்குகள் விற்பனை செய்யப்படுகின்றன. பெரியளவில் வருவாய் இல்லாத நிலையிலும் பரம்பரை தொழிலை கைவிட மனமில்லை. அரசு வங்கி கடன், மானியம், மண் அள்ள சதிகளை செய்து தர வேண்டும் என்றார்.
இவரை பாராட்ட 79047 90875.