பதிவு செய்த நாள்
14
அக்
2019
03:10
திருவள்ளூர்: வேதாந்த தேசிகன் சாற்று மறை உற்சவத்தில் பங்கேற்பதற்காக, திருவள்ளூர், வீரராகவ பெருமாள், நேற்று இரவு ஸ்ரீபெரும்புதுார் புறப்பட்டு சென்றார். ஸ்ரீபெரும்புதுார், வேதாந்த தேசிகன் அவதார மஹோற்சவம், 751வது அவதார நாள், இன்று நடைபெறுகிறது. ஆண்டுதோறும் நடைபெறும் இந்நிகழ்ச்சியில், திருவள்ளூர் வீரராகவ பெருமாள், ஸ்ரீபெரும்புதுார் எழுந்தருளி, ஆசிர்வதித்து அருள்பாலிப்பார். இந்த ஆண்டும், சாற்றுமறை நிகழ்ச்சியை முன்னிட்டு, நேற்றிரவு, 10:00 மணிக்கு, வீரராகவர் கோவிலில் இருந்து, உற்சவர் புறப்பாடு நடந்தது.வழிநெடுகிலும் உபயங்கள் கண்டருளி, இன்று அதிகாலை, ஸ்ரீபெரும்புதுார் சென்றடைகிறார். அங்கு, பகல், 12:30 மணிக்கு, வீரராகவருக்கு திருமஞ்சனம் நடைபெறும்.அதை தொடர்ந்து, அன்றிரவு, 9:00 மணிக்கு உற்சவர் வீரராகவர் வீதி புறப்பாடு செல்வார். பின், நாளை காலை, ஸ்ரீபெரும்புதுாரிலிருந்து, வீரராகவர் திருவள்ளூருக்கு புறப்பட்டு செல்வார்.