பதிவு செய்த நாள்
14
அக்
2019
05:10
வீரபாண்டி: அழகிரிநாதர் கோவிலில், திருக்கல்யாணம் கோலாகலமாக நடந்தது. புரட்டாசியையொட்டி, சேலம், உத்தமசோழபுரம், அழகிரிநாதர் கோவிலில், சனிதோறும், திருக்கோடி ஏற்றப்பட்டு, சிறப்பு பூஜை நடந்தது. புரட்டாசி நண்பர் குழு சார்பில், நேற்று காலை, மூலவர் அழகிரிநாதருக்கு அபி?ஷகம் செய்து மலர்மாலைகளால் ராஜ அலங்காரம் செய்யப்பட்டது. தொடர்ந்து, ஸ்ரீதேவி, பூதேவி சமேத அழகிரிநாதர் உற்சவர் திருமேனிகளுக்கு திருமஞ்சனம் நடந்தது. பின், பட்டாச்சாரியார்கள், மாங்கல்ய பூஜை செய்து, அழகிரி நாதரின் இருபுறமும் வைக்கப்பட்ட தேவியருக்கு, மாங்கல்யம் அணிவித்து திருக் கல்யாணத்தை நடத்திவைத்தனர். ஏராளமானோர் தரிசனம் செய்தனர். மாலை, சப்பரத்தில் சுவாமி ஊர்வலம் நடந்தது. அதில், திரளான பக்தர்கள், அழகிரி நாதருக்கு மொய் எழுதி, தங்கள் வேண்டுதலை நிறைவேற்றினர். பின், பக்தர்களுக்கு விருந்து பரிமாறப்பட்டது.