பண்ருட்டி அடுத்த திருவதிகை அம்பாள் பெரியநாயகி உடனுறை வீரட்டானேஸ்வரர் கோவிலில், நேற்று முன்தினம் மாலை, பவுர்ணமியை முன்னிட்டு, மூலவர் வீரட்டானேஸ்வரர், அம்பாள் பெரியநாயகி சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடந்தது. மாலை 6:00 மணிக்கு பக்தர்கள் நான்குமாட வீதியை வலம் வருதல், இரவு 7:00 மணிக்கு உற்சவர் அம்பாள் பெரியநாயகி உள்புறப்பாடு நடந்து. ஊஞ்சல் உற்சவத்தில் பதினாரு கால் மண்டபத்தில் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அம்பாள் அருள் பாலித்தார். இரவு 10:30 மணிக்கு, பவுர்ணமியை முன்னிட்டு, மூலவர் வீரட்டானேஸ்வரர், அம்பாள் பெரியநாயகி சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், பூஜை நடந்தது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமியை தரிசனம் செய்தனர்.