விக்கிரமங்கலம்: மதுரைமாவட்டம் விக்கிரமங்கலம் கோவில்பட்டியில் 1200 ஆண்டுகள் பழமையான மருதோதய ஈஸ்வரமுடையார் கோயில் அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ளது. இக்கோயில் பிரதோஷ கமிட்டி சார்பில் செப்.,8ல் சிவன், பார்வதி ஐம்பொன் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டன. அக்.,12 இரவு சிலைகள் திருடு போயின. டி.எஸ்.பி.,ராஜா தலைமையில் போலீசார் அதே கிராமத்தை சேர்ந்த சிலரை விசாரித்தனர். விருமாண்டி மகன் வினித்தை 21, கைது செய்தனர். அவர் கோயில் அருகே மறைத்து வைத்திருந்த சிலைகளை மீட்டனர்.