நாடியம்மன் கோவில் திருவிழாவில் வரகரிசி மாலை போடும் நிகழ்ச்சி!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
10ஏப் 2012 11:04
பட்டுக்கோட்டை: பட்டுக்கோட்டையின் பிரசித்திபெற்ற நாடியம்மன் கோவில் திருவிழாவின் ஐந்தாம் நாள் மண்டகபடியான மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட இந்திர விமானத்தில் வெள்ளி சிம்மவாகன வரகரிசி மாலை போடும் திருவிழா கொண்டாடப்பட்டது.பட்டரை மண்டகபடிதாரர்கள் மற்றும் நகர வர்த்தக சங்கம் இணைந்து நடத்திய மண்டகபடியாகும். இந்த திருவிழாவின்போது நள்ளிரவு 12 மணிக்கு அம்பாள் சிம்ம வாகனத்தில் எழுந்தருளி நகரின் முக்கிய வீதிகள் வழியக வந்து பிள்ளையார்கோவில் தெருவில் அதிகாலை ஐந்து மணியளவில் பூப்போடும் நிகழ்ச்சி நடந்தது. இதைக் காண ஆண்கள், பெண்கள் குழந்தைகள் என 20 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் காத்திருந்து வழிபடுவது தான் இந்த வரகரிசி மாலை போடும் மண்டகபடியின் சிறப்பம்சமாகும். இதைத்தாடர்ந்து மகாராஜேஸ்ரீ காட்கேராவ் சாகேப் மண்டகபடி, தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர் சங்கம் சார்பில் மண்டகபடி, திருக்கோவில் திட்டம், கடைசியாக நெடுஞ்சாலைத்துறை அலுவலர்கள் மற்றும் ஒப்பந்த தாரர்கள் என தொடர்ந்து 11 நாள் மண்டகபடிதாரர்கள் விழாவாக கொண்டாடப்படுகிறது. முடிவில் இரண்டு நாட்கள் மிக விமர்சையான தேரோட்டம் நடைபெறும். முடிவில் முத்துபல்லக்கு காட்சியுடன் கோட்டைக்கு எழுந்தருளுதல் நிகழ்ச்சியுடன் திருவிழா முடிவடையும்.