சிவகங்கை : மானாமதுரையில் ஸத்குரு ஸ்ரீசதாசிவ பிரமேந்த்ராள் 32ம் ஆண்டு ஆராதனை விழா ஏப்.,29ல் துவங்குகிறது. மானாமதுரை எம்.எஸ்.ஏ.பி., உண்ணாமலை அம்மாள் திருமண மகாலில் ஆராதனை விழா ஏப்.,29ம் தேதி காலை 10.30 மணிக்கு பக்தி பாடல்களுடன் துவங்குகிறது. அன்று மாலை 6 மணிக்கு பி.எஸ்., நாராயணசுவாமி தலைமையில் துவங்குகிறது.தினமணி ஆசிரியர் வைத்யநாதன் சிறப்பு விருந்தினராக பங்கேற்கிறார். இரவு 7.30 மணிக்கு ஸ்ரீசதாசிவேந்த்ர ஸ்தவம் நடக்கும். ஏப்.,30 அன்று காலை 8.30 மணிக்கு துவங்கி இரவு 8.30 மணி வரை பக்தி பாடல்கள் நிகழ்ச்சி நடக்கும். மே.,1ம் தேதி காலை 7 மணிக்கு உஞ்சவ்ருத்தி, ருத்ரஜபம், காலை 9 மணிக்கு குருஅஞ்சலி, கோஷ்டிகானம் நடைபெறும். காலை 10 மணிக்கு விக்னேஸ்வர பூஜையுடன் ஆராதனை விழா நடைபெறுகிறது. ஸத்குரு ஸ்ரீசதாசிவ பிரம்மேந்த்ராள் ஆராதனை கமிட்டியினர் ஏற்பாட்டைசெய்து வருகின்றனர்.