Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news மாமல்லபுரத்தில் குவியும் ... திண்டிவனம் சங்கட ஹர சதுர்த்தி விழா
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கீழடியில் 6ம் கட்ட அகழாய்வு மத்திய அரசின் அனுமதி கிடைக்குமா
எழுத்தின் அளவு:
கீழடியில் 6ம் கட்ட அகழாய்வு மத்திய அரசின் அனுமதி கிடைக்குமா

பதிவு செய்த நாள்

19 அக்
2019
12:10

திருப்புவனம், சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே கீழடியில் 6ம் கட்ட அகழாய்விற்கு மத்திய அரசு விரைவில் அனுமதி வழங்க வேண்டும், என தொல்லியல் ஆர்வலர்கள் வலியுறு த்தியுள்ளனர்.கீழடி பள்ளிச்சந்தை புதுாரில் மத்திய தொல்லியல் கண்காணிப்பாளர் அமர்நாத் ராமகிருஷ்ணன் தனது குழுவினருடன் அகழாய்வு பணியில் ஈடுபட்டார். இதில் கட்டுமான சுவர்களுடன் கூடிய கட்டடம் உள்ளிட்ட பொருட்கள் கிடைத்தன. இரண்டு கட்ட அகழாய்வில் ஏராளமான சான்றுகள் கிடைத்தது.அதன்பின் தமிழக தொல்லியல் துறை இரண்டு கட்ட அகழாய்வை நடத்தியுள்ளது.

இதில் கிடைத்த பொருட்கள் 2,600 ஆண்டுகளுக்கு முற்பட்டவை என உறுதி செய்யப்பட்டு ள்ளது. தற்போது 6ம் கட்ட அகழாய்வை நடத்த மத்திய அரசிடம் தமிழக தொல்லியல் துறை விண்ணப்பித்துள்ளது. தற்போது அனுமதி கிடைத்தால் ஜனவரியில் தொடங்கி செப்டம்பர் வரை அகழாய்வு நடத்த வசதியாக இருக்கும்.4 மற்றும் 5ம் கட்ட அகழாய்விற்கு மத்திய அரசு தாமதமாக அனுமதி வழங்கியதால் பணிகளும் தாமதமாக தொடங்கின. இதுவரை நடந்த அகழாய்வுகள் குறைந்த கால கட்டத்தில் மட்டுமே நடைபெற்றன.

இம்முறை தமிழக தொல்லியல் துறை முன்கூட்டியே மத்திய தொல்லியல் ஆலோசனை குழுவிடம் விண்ணப்பித்து விட்டது.5ம் கட்ட அகழாய்வில் இணை இயக்குனர் சிவானந்தம், காப்பாட்சியர் ஆசைத்தம்பி தலைமையில் 10 ஊழியர்கள் மட்டுமே பணியாற்றினர். 6ம் கட்ட அகழாய்வுகீழடியைச் சுற்றியுள்ள அகரம், மணலுார்,கொந்தகை உள்ளிட்ட பகுதிகளிலும் மேற்கொள்ள தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. இதனால் கூடுதல் ஊழியர்களை நியமிக்கவும் கூடுதல் நிதியை தமிழக அரசு ஒதுக்க வேண்டும் என தொல்லியல் ஆர்வலர்கள் வலியுறுத்தி யுள்ளனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திண்டுக்கல்; ஆடி வெள்ளிக்கிழமையையொட்டி அம்மன் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடந்தது. கூழ் படைத்து ... மேலும்
 
temple news
திருவாரூர் : திருவாரூர் மாவட்டம், விளமல் பதஞ்சலி மனோகரர் கோவிலில் இன்று ஆடி வெள்ளிக்கிழமையை ... மேலும்
 
temple news
ஆடி முதல் வெள்ளியை முன்னிட்டு, அம்மன் கோயில்களில் பக்தர்களின் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. அதிகாலை ... மேலும்
 
temple news
திருப்புவனம்; ஆடி முதல் வெள்ளியை முன்னிட்டு மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயிலில் இன்று ஏராளமான ... மேலும்
 
temple news
திருச்சி; ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோவிலில் ரெங்கநாச்சியார் ஜேஷ்டாபிஷேகத்தை முன்னிட்டு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar