பதிவு செய்த நாள்
19
அக்
2019
12:10
கோபி: பச்சமலை முருகன் கோவிலில், 2020ல் கும்பாபிஷேகம் நடத்த முடிவு செய்யப் பட்டுள்ளது.
ஈரோடு மாவட்டம், கோபி, பச்சமலையில், பிரசித்தி பெற்ற முருகன் கோவில் உள்ளது. இங்கு, 1981, 2006ல் கும்பாபிஷேகம் நடந்தது. மூன்றாவது கும்பாபிஷேகம் நடத்த, இந்து சமய அறநிலையத்துறை முடிவு செய்தது. இதையடுத்து உபயதாரர்கள் நிதி உதவியுடன், கோவி லில் பல்வேறு திருப்பணி நடக்கிறது. சிவன் சன்னதி மண்டபத்தில், 16 லட்சம் ரூபாயில் அழகுபடுத்தும் பணி, கோபுரம் கட்டப்படுகிறது. அர்த்த மண்டப வளாகத்தில், தேக்கு மர கனக சபையில் அருள்பாலிக்கும் நடராஜர், சிவகாமி அம்பாளுக்கு, 32 லட்சம் ரூபாய் செலவில், தனி சன்னதி கட்டும் பணி, கடந்த ஏப்.,22ல் துவங்கியது.
இதற்காக, மலைப்பாதை வடகிழக்கு பகுதியில், பாறைகளை உடைத்து அஸ்திவாரம் அமைக் கப்பட்டது. அதில் கிடைத்த கருங்கற்களை அடுக்கி, 42 அடி உயரத்துக்கு கான்கிரீட் கட்டமைப்பு நடந்தது. இப்பணி சமீபத்தில் முடிந்ததால், பிரதான கோவில் கட்டமைப்புக்காக, கல் கட்டமைப்பு பணி, பூமி பூஜையுடன் நேற்று காலை துவங்கியது. 12 அடி நீளம், 16 அடி அகலம், 13 அடி உயரத்தில் சன்னதி அமைகிறது. இதையடுத்து கோவில் முக்கியஸ்தர், அறநிலையத்துறையினர் முன்னிலையில், மூன்றாவது கும்பாபிஷேகம் நடத்துவது குறித்து, ஆலோசனை கூட்டம் நடந்தது. இதில், 2020 ஜூலை, 2ல், காலை, 9:30 முதல், 10:30 மணிக்குள் கும்பாபிஷேகம் நடத்த முடிவு செய்யப்பட்டது.