பதிவு செய்த நாள்
19
அக்
2019
12:10
அன்னுார்:மொண்டிபாளையம், வெங்கடேசப் பெருமாள் கோவிலில், ஆறாவது வார புரட்டாசி திருவிழா இன்று (அக்., 19ல்) நடக்கிறது.மொண்டிபாளையம், வெங்கடேசப் பெருமாள் கோவில், புரட்டாசி திருவிழா பிரசித்தி பெற்றது. ஆவணி மாத கடைசி சனி, புரட்டாசி மாத நான்கு சனிக்கிழமை கள், ஐப்பசி மாத முதல் சனிக்கிழமை என ஆறு வாரங்கள் மொண்டி பாளையத்தில் சிறப்பு வழிபாடு நடக்கிறது.
ஆறாவது சனிக்கிழமையான இன்று (அக்., 19ல்) அதிகாலை, 5:00 மணிக்கு, வெங்கடேசப் பெருமாளுக்கு திருமஞ்சனம் நடக்கிறது. பின்னர், அபிஷேக பூஜை, அலங்கார பூஜை நடக் கிறது. இரவு 7:30 மணிக்கு கருட வாகனத்தில், ஸ்ரீதேவி, பூதேவி சமேதராக வெங்கடேசப் பெருமாள், திருவீதி உலாவுடன் புரட்டாசி விழா நிறைவு பெறுகிறது.
அருகம்பாளையம், பாலபட்டாபி ராமர் கோவிலில், 64 வது ஆண்டு புரட்டாசி விழா இன்று (அக்., 19ல்) நடக்கிறது. காலை 7:00 மணிக்கு எண்ணை காப்பு, பால், இளநீரில் பூஜை நடக்கிறது. மதியம் 12:00 மணிக்கு சிறப்பு வழிபாடு நடக்கிறது. அன்னதானம் வழங்கப்படுகிறது. இரவு 9:00 மணிக்கு துவங்கி, ஞாயிறு அதிகாலை 3:00 மணி வரை பஜனை நடக்கிறது.