பதிவு செய்த நாள்
21
அக்
2019
10:10
நாமக்கல்: ஐப்பசி மாதம், முதல் ஞாயிற்றுக்கிழமையை முன்னிட்டு, நாமக்கல் ஆஞ்சநேயருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் நடந்தது. நாமக்கல் ஆஞ்சநேயர் கோவிலில், தமிழ் மாதம் முதல் ஞாயிறு, அமாவாசை, பவுர்ணமி, ஆஞ்சநேயர் ஜெயந்தி, வருட பிறப்புகள் உள்ளிட்ட விழாக்காலங்களில் சிறப்பு வழிபாடு நடைபெறும்.
அந்த வகையில், நேற்று ஐப்பசி முதல் ஞாயிற்றுக்கிழமையை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடந்தது. காலை, 9:00 மணிக்கு வடை மாலை அலங்காரம் நடந்தது. 10:00 மணிக்கு நல்லெண்ணெய், சீயக்காய்த்துாள், மஞ்சள், பால், தயிர், வெண்ணெய், தேன், பஞ்சாமிர்தம், சந்தனம் போன்ற பொருட்களால் பூர்ணகும்பம் சிறப்பு அபி ஷேகம் செய்யப்பட்டது. மதியம், 1:00 மணிக்கு சுவாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது.ஈரோடு, சேலம், தர்மபுரி, கரூர், திருச்சியில் இருந்து வந்திருந்த, ஆயிரக்கணக்கான பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சுவாமி தரிசனம் செய்தனர்.