பதிவு செய்த நாள்
21
அக்
2019
10:10
பெ.நா.பாளையம்: பெரியநாயக்கன்பாளையம் அருகே காளிபாளையத்தில் உள்ள ஸ்ரீதேவி, பூதேவி சமேத ஸ்ரீ திருமலைராய பெருமாள் திருக்கோவிலில், சனிக்கிழமை சிறப்பு பூஜைகள் நடந்தன.காலை, 6:00 மணிக்கு திருப்பள்ளியெழுச்சியுடன் விழா துவங்கியது.
தொடர்ந்து, 8:00 மணிக்கு பெருமாளுக்கு காலை பூஜை நடந்தது. திவ்யப் பிரபந்த சாற்றுமுறையும், பெரியநாயக்கன்பாளையம், மேட்டுப்பாளையம் நடூர் பஜனைக்குழுவினரின் நாமசங்கீர்த்தன பஜனைகள் நடந்தன. உற்சவ மூர்த்திகளுக்கு பன்னிரு வகை அபிஷேகங்கள், பெருமாளுக்கு ராஜ அலங்காரம் நடந்தது. பின்னர், பெருமாள் கருட வாகனத்தில் எழுந்தருளினர். இதில் கலந்து கொண்ட பக்தர்கள் பொட்டுக்கடலை, கரும்பு சர்க்கரை நைவேத்தியமாக படைத்ததுடன், தங்கள் குழந்தைகளுக்கு தலைமுடி இறக்கியும், நேர்த்திக் கடன் செலுத்தினர்.பின்னர், அன்னதானத்தில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். இதே போல புதுப்புதுார் ஆதிமூர்த்தி பெருமாள் உள்ளிட்ட கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடந்தன.