சபரிமலை: சபரிமலையில் ஐப்பசி மாத பூஜைகளுக்காக நான்கு நாள் திறக்கப்பட்ட நடை நாளை செவ்வாய் கிழமையுடன் நிறைவு பெறுகிறது.
ஐப்பசி மாத பூஜைகளுக்காக சபரிமலை நடை 17ம் தேதி திறக்கப்பட்டது. தொடர்ந்து ஆழி குண்டத்தில் நெருப்பு வளர்த்த பின்னர் 18–ம் படி வழியாக பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர். மகரவிளக்கு மண்டல பூஜை காலங்களில் வருவதுபோல மாத பூஜைக்கும் இருமுடி கட்டி அதிக அளவில் பக்தர்கள் வருகை தந்திருந்தனர். நான்கு நாள் திறக்கப்பட்ட நடை நாளை செவ்வாய் கிழமையுடன் நிறைவு பெறுகிறது.