திருக்கோவிலூர்: திருக்கோவிலூர், கீழையூர் வீரட்டானேஸ்வரர் கோவிலில் திருவாசக முற்றோதல் நடந்தது.
திருஞானசம்பந்தர் பிறந்தநாளும், சிவகாமி அம்மையாள் ஞானசம்பந்தர் ஞானப்பால் உண்ட தினமான திருவாதிரை நட்சத்திர திருநாள் அன்று ஒவ்வொரு மாதமும் திருக்கோவிலூர் வீரட்டானேஸ்வரர் கோவிலில் சிவனடியார்கள் மூலம் திருவாசகம் முற்றோதல் நடைபெறுகிறது.இதையொட்டி, நேற்று காலை 8:30 மணிக்கு சிவானந்த வல்லி சன்னதியில், சிவனடி செல்வர் அம்பலவாணன் தலைமையில் முற்றோதல் விழா விழா துவங்கியது. குழுவின் செயலாளர் சிவகுருநாதன் உள்ளிட்ட ஏராளமான சிவனடியார்கள் கலந்து கொண்டு திருவாசகம் வாசித்தனர்.உலக நன்மைக்காக வேண்டிக் கொள்ளப்பட்ட நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை சிவனடியார் குழுவினர் செய்திருந்தனர்.