திருப்பரங்குன்றத்தில் நீராட பக்தர்கள் எதிர்பார்ப்பு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
22அக் 2019 12:10
திருப்பரங்குன்றம் : திருப்பரங்குன்றத்திலுள்ள தென்கால், பானாங்குளம், செவ்வந்திகுளம் கண்மாய்களுக்கு வைகை அணை தண்ணீர் வந்தால் நீராட வசதியாக இருக்கும் என சஷ்டி பக்தர்கள் எதிர்ப்பார்ப்பில் உள்ளனர்.
சுப்பிரமணிய சுவாமி கோயிலில் அக்., 28 - நவ.,3 வரை கந்தசஷ்டி திருவிழா நடக்கிறது. இந்நாட்களில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் காப்புகட்டி கோயிலில் தங்கி விரதமிருப்பர். தினமும் காலை, மாலை சரவணபொய்கையில் சஷ்டி பக்தர்கள் வழக்கமாக நீராடுவர். தற்போது அங்கு நீராட தண்ணீர் உகந்ததாக இல்லை. கோயிலுக்குள் உள்ள லட்சுமி தீர்த்த குளம், கோயில் அருகிலுள்ள தென்கால் கண்மாய், மலைக்குப்பின்புறமுள்ள செவ்வந்தி குளம், பானாங்குளம் கண்மாய்களும் வறண்டுள்ளன. தற்போது வைகை ஆற்றில் திறந்து விடப்பட்டுள்ள அணை தண்ணீரில் சிறிதளவு அல்லது ஆற்றுக்கால் பகுதிகளில் பெய்துவரும் மழைநீரையோ இக்கண்மாய்களுக்கு திறந்து விட்டால் நீராட வசதியாக இருக்கும் என சஷ்டி பக்தர்கள் கோரிக்கை வைக்கின்றனர்.