ராமநாதபுரம் : பாண்டியூர் தர்ம முனீஸ்வரர் கோயில் சித்தனேந்தல் வைகை தடுப்பணை கரையில் உள்ளதால் கோயில் செல்ல வசதியாக பாண்டியூர் கால்வாயில் பாலம் அமைக்க பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர் .
பாண்டியூர் தர்ம முனீஸ்வரர் கோயில் சித்தனேந்தல்அருகே வைகை ஆற்றின் கரையில் அமைந்துள்ளது.கோயிலின் வடக்கு பகுதியில் ஆர்.எஸ்.மங்கலம் கண்மாய்க்கு செல்லும் கால்வாய் அமைந்துள்ளது. அதே போல் தெற்கு பகுதியில் பாண்டியூர் செல்லும் கால்வாய் அமைந்துஉள்ளது. மழை நேரங்களில் இந்த கால்வாய் பகுதிகளில் தண்ணீர் பெருக்கெடுத்து செல்லும் போதுபக்தர்கள் கோயிலுக்கு செல்ல முடியாமல் தவிக்கின்றனர்.புரட்டாசி கடைசி வெள்ளியில் ஆண்டு தோறும் களரி திருவிழா நடக்கும். அப்போது அப்பகுதியில் உள்ள பாண்டியூர், அரசடி வண்டல், கங்கை கொண்டான், மணிச்சியேந்தல்,சதுர்வேதி மங்கலம், மும்முடிசாத்தான் ஆகிய கிராமங்களை சேர்ந்த ஆயிரக்கணக்கான மக்கள் கோயில் திருவிழா விற்கு வருவார்கள்.
மழை நேரங்களில் கால்வாயை கடந்து மக்கள் செல்வதில் சிரமம் ஏற்படுகிறது.இப்பகுதி மக்கள் எம்.பி., எம்.எல்.ஏ., க்களிடம் பலமுறை பாலம் கட்ட கோரிக்கை விடுத்தும் இன்று (அக்., 22ல்) வரை நடவடிக்கை எடுக்க வில்லை. மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்து பாலம் அமைக்க வேண்டும், என்றார்.