பதிவு செய்த நாள்
22
அக்
2019
01:10
தஞ்சாவூர்: குடந்தை அருகே, கோவில் சன்னிதியில் இருந்த ஆஞ்சநேயர் சிலையை, காரில் வந்த, ஐந்து பேர் கும்பல் திருடிச் சென்றது, அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தஞ்சாவூர், கும்பகோணம் அடுத்த பட்டீஸ்வரத்தில், தேனுபுரீஸ்வரர் கோவில் உள்ளது. இங்குள்ள துர்க்கையம்மன், பிரசித்தி பெற்றது.மூலவரின் வலதுபுறத்தில் உள்ள சுவாமி சன்னிதி கோஷ்டத்தில், 1 அடி உயரமுள்ள, 1,000 ஆண்டுகள் பழமையான ஆஞ்சநேயர் சிலை பதிக்கப்பட்டிருந்தது.நேற்று முன்தினம் விடுமுறை என்பதால், கோவிலில் பக்தர்கள் கூட்டம் அதிகம் இருந்துள்ளது.
இரவு, 8:00 மணிக்கு, கோவில் குருக்கள் கணஷேன், சன்னிதியை சுற்றி வந்த போது, கோஷ்டத்தில் இருந்த ஆஞ்சநேயர் சிலை மாயமாகி இருப்பதைக் கண்டு, அதிர்ச்சி அடைந்தார். கோவில் அதிகாரிகள், அங்குள்ள, சிசிடிவி பதிவுகளை ஆய்வு செய்தனர். அதில், இரவு, 7:00 மணிக்கு ஒரு இண்டிகா காரில் வந்த, ஐந்து பேர் கும்பல், மூலவர் சன்னிதி அருகே வந்து, வெகு நேரமாக பயபக்தியுடன் சுவாமி கும்பிட்டனர்.பின், ஐந்து பேரில், மூவர், சுவரை மறைத்து நிற்க, இருவர், ஆஞ்சநேயர் சிலையை கைகளால் ஆட்டி பெயர்த்து எடுத்து, கட்டை பைக்குள் வைத்து, வெளியே எடுத்துச் செல்லும் காட்சிகள் பதிவாகியிருந்தன.இந்த கொள்ளை, 30 நிமிடங்களில் நடந்துள்ளது. பட்டீஸ்வரம் போலீசார் வழக்கு பதிவு செய்து, சிலை கொள்ளையர்களை தேடி வருகின்றனர்.