உத்தரகோசமங்கை : உத்தரகோசமங்கை மங்களநாதர் சமேத மங்களேஸ்வரி அம்மன் கோயிலில் திருவாசகம் முற்றோதல் விழா நடந்தது.
சிவதொண்டன் சிவனடியார் திருக்கூட்டத்தை சேர்ந்த சேதுபதி தலைமையில் ஏராளமான சிவனடியார்கள், பக்தர்கள் திருவாசகத்தை, கோயில் பிரகாரத்தில் அமர்ந்து முழுவமாக ஓதி வழிபட்டனர். சமஸ்தான திவான் பழனிவேல் பாண்டியன் முன்னிலை வகித்தார். மூலவர்கள் மங்களநாதர், மங்களேஸ்வரி அம்மன், மாணிக்கவாசகப்பெருமான், மரகத லிங்கத்திற்கு விஷேச அபிஷேக, ஆராதனைகள் நிறைவேற்றப்பட்டது. திருக்கயிலாய வாத்தியங்கள் முழங்க உத்தரகோசமங்கை நான்கு ரத வீதிகளிலும் பாடியவாறு வலம் வந்தனர்.வெளியூர்களை சேர்ந்த ஏராளமான சிவனடியார்கள், பக்தர்கள் கலந்து கொண்டனர். அன்னதானம் நடந்தது.