சென்னை : தமிழகத்தில் இருந்து சபரிமலை செல்லும் ஐயப்ப பக்தர்கள் பிளாஸ்டிக் பொருட்களை எடுத்துச் செல்ல தடை விதிக்கப்படுவதாக இந்து அறநிலையத்துறை தெரிவித்துள்ளது. இதே போன்று பம்பையில் குளிக்கும் பக்தர்கள் தாங்கள் அணிந்து செல்லும் ஆடைகளை நீரில் களைந்து விடுவதற்கும் இந்து அறநிலையத்துறை தடை விதித்துள்ளது.