மதுரை, மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் தீபாவளி (அக்.,27) முதல் பக்தர்களுக்கு லட்டு பிரசாதம் இலவசமாக வழங்கப்படவுள்ளது.
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பக்தர்களுக்கு லட்டு பிரசாதம் இலவசமாக வழங்கப்படுகிறது. மீனாட்சி அம்மன் கோயிலிலும் லட்டு பிரசாதம் இலவசமாக வழங்குவது குறித்து தக்கார்கருமுத்து கண்ணன் தலைமையில் இணைகமிஷனர் நடராஜன் மற்றும் அதிகாரிகள் குழு ஆலோசனை நடத்தினர். பின்னர், தீபாவளி அன்று முதல் பக்தர்கள் அனைவருக்கும் லட்டு பிரசாதம்இலவசமாக வழங்கப்படும், என கோயில் நிர்வாகம் அறிவித்தது. தரிசனம் முடிந்து வெளியே வரும் போது லட்டு வழங்கப்படும்.மதுரையில் பிட்டுக்கு மண் சுமந்த சிவபெருமானை போற்றும் விதமாக லட்டுக்கு பதிலாக பிட்டு வழங்க ஹிந்து அமைப்பினர் கோரினர். பிட்டு ஒரே நாளில் கெட்டு விடும். பத்து நாட்கள் வரை கெடாமல் இருக்கும் என்பதால் பிரசாதமாக லட்டு வழங்கப்படவுள்ளது.