பதிவு செய்த நாள்
25
அக்
2019
11:10
திருத்தணி: திருத்தணி, முருகன் கோவிலில், வரும், 28ம் தேதி முதல், கந்த சஷ்டி விழா துவங்கி, நவ., 3ம் தேதி, திருக்கல்யாணத்துடன் நிறைவு பெறுகிறது.
திருத்தணி, முருகன் கோவிலில், ஆண்டுதோறும் தீபாவளி முடிந்து மறுநாளில் இருந்து, ஏழு நாட்களுக்கு கந்த சஷ்டி சிறப்பு வழிபாடு நடைபெறும். இதில், உற்சவர் சண்முகப் பெருமானுக்கு, காவடி மண்டபத்தில், காலை, 8:00 மணி முதல், இரவு, 8:00 மணி வரை தொடர்ந்து லட்சார்ச்சனை, தீபாராதனை நடக்கிறது. அந்த வகையில், நடப்பாண்டிற்கான கந்த சஷ்டி விழா, 28ம் தேதி துவங்கி, அடுத்த மாதம், 3ம் தேதி வரை நடக்கிறது.தினமும், காலை, 10:00 மணிக்கு, மூலவருக்கு புஷ்பம், பட்டு, தங்க கவசம், திருவாபரணம், வெள்ளி கவசம் மற்றும் சந்தனக்காப்பு போன்ற அலங்காரம் மற்றும் சிறப்பு தீபாராதனை நடக்கும். நவ., 2ம் தேதி, மாலை, 5:00 மணிக்கு உற்சவர் சண்முகப் பெருமானுக்கு, புஷ்பாஞ்சலியும், நவ., 3ம் தேதி காலை, 11:00 மணிக்கு, உற்சவருக்கு, திருக்கல்யாணமும் நடக்கிறது.