சங்கராபுரம்: சங்கராபுரம் வள்ளலார் மன்றத்தில் ஐப்பசி மாத பூச விழா நடந்தது. மன்ற செயலர் நாராயணன் தலைமை தாங்கினார். பொருளாளர் முத்துக்கருப்பன், ஜெய் பிரதரஸ் நற்பணி மன்ற தலைவர் விஜயகுமார் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சி அமைப்பாளர் சக்கரவர்த்தி வரவேற்றார்.மன்ற பூசகர் சிவஞான அடிகள் முன்னிலையில் அகவல் படித்து உலக அமைதிக்காக பிரார்த்தனை செய்யப்பட்டது. சிறப்பு ஜோதி தரிசனத்திற்குப்பின் அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.சன்மார்க்க இளைஞரணி தலைவர் கார்த்திகேயன் நன்றி கூறினார்.