நகரி: காளஹஸ்தி கோவில் உண்டியலில், 28 நாட்களில், 1.4 கோடி ரூபாய், பக்தர்கள் காணிக்கையாக செலுத்தி உள்ளனர்.
சித்துார் மாவட்டம், காளஹஸ்தியில், வாயுலிங்கேஸ்வரர் கோவிலுக்கு, தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து சுவாமியை தரிசிக்கின்றனர். பக்தர்கள் உண்டியலில் செலுத்திய காணிக்கை மூலம், 28 நாட்களில், 1 கோடியே, 4 லட்சத்து, 30 ஆயிரத்து, 929 ரூபாய் ரொக்கம், 398 கிலோ வெள்ளி, 68 வெளிநாட்டு கரன்சிகள் ஆகியவை இருந்தன. மேற்கண்ட தகவலை, கோவில் நிர்வாக அதிகாரி சந்திரசேகரரெட்டி தெரிவித்தார்.