நாகப்பட்டினம்: திருச்சி, மணப்பாறை நடுகாட்டுப்பட்டியில் ஆழ்துறை கிணற்றுக்குள் விழுந்த குழந்தையை பத்திரமாக மீட்க, நாகூர் தர்காவில் சிறப்பு தொழுகை நடந்தது. இதில் 50க்கும் மேற்பட்ட முஸ்லீம்கள் கலந்து கொண்டனர். வந்தவாசியில் உள்ள அனைத்து பள்ளிவாசல்களிலும் சிறப்பு பிரார்த்தனை நடந்தது.