பதிவு செய்த நாள்
28
அக்
2019
11:10
நவக்கிரகங்களில் பூரணசுப கிரகமான குருபகவான் விருச்சிக ராசியில் இருந்து இன்று (ஆக்., 28ல்) இரவு3:49 மணிக்கு தனுசு ராசிக்கு பெயர்ச்சியாகிறார்.
திருவாரூர் மாவட்டம் ஆலங்குடி, தஞ்சாவூர் அருகே தென்குடித்திட்டை, மதுரை அருகே குருவித்துறை, சிவகங்கை மாவட்டம் பட்டமங்கலம் தட்சிணாமூர்த்தி கோயில், திருச்சி அருகே உத்தமர்கோவில், சென்னை பாடி வலிதாயநாதர், திருவொற்றியூர் காஞ்சிபுரம் அருகே கோவிந்தவாடி, அகரம் குருகோயில், வேலூர் அருகே தக்கோலம், திருச்செந்தூர் உள்ளிட்ட தலங்களிலும், சிவன்கோயில்களில் உள்ள தட்சிணாமூர்த்தி, நவக்கிரக சன்னதிகளில் குருப்பெயர்ச்சியை முன்னிட்டு லட்சார்ச்சனை, சிறப்பு யாகம், அபிஷேகம், ஆராதனை நடக்கும். இந்த பெயர்ச்சியால் மேஷம், மிதுனம், சிம்மம், விருச்சிகம், கும்பம் ராசியினருக்கு நற்பலனும், கன்னி, தனுசு, மீனம் ராசியினருககு சுமாரான பலனும் உண்டாகும். ரிஷபம், கடகம், துலாம் மகரம் ராசியினர் பரிகாரமாக குருபகவான், தட்சிணாமூர்த்தியை வழிபட வேண்டும்.
குரு ஸ்லோகம்
தேவனாம்ச ரிஷணாம்ச
குரும் காஞ்சன ஸந்நிபம்!
புத்தி பூதம் த்ரிலோகேசம்
தம் நமாமி ப்ருகஸ்பதிம்!!
பொருள்: தேவர்கள் ஞானிகளுக்கு குருவாகத் திகழ்பவரே! பொன் போல பிரகாசிப்பவரே! ஞானமே வடிவானவரே! மூவுலகங்களுக்கும் தலைவனாக விளங்குபவரே!
பிரகஸ்பதியே! உம்மை வணங்குகிறோம்.
இதை பக்தியுடன் 12 முறை படித்தால் குருபகவான் அருளால் வாழ்வில் குறையனைத்தும் தீரும், கோடி நன்மை சேரும்.