கூடலுார் : கந்த சஷ்டியை ஒட்டி கூடலுார் கூடல் சுந்தரவேலவர் கோயிலில் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடந்தது. சிறப்பு அலங்காரத்தில் சுவாமி அருள்பாலித்தார். மகளிர் குழுவினரின் தெய்வீகக்கூட்டு வழிபாடு பிரார்த்தனை நடந்தது. திருவருள் செல்வர் என்ற தலைப்பில் கவிஞர் பாரதன் சொற்பொழிவு ஆற்றினார். ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.